Saturday 2 December 2017

ஒரு சிறு விளக்கம்

வீடு வாடகைக்கு எடுப்பது குறித்த ஒரு சிறிய விளக்கம்

1. பலரும் இந்த வீட்டின் இரு பகுதிகளையும் வாடகைக்கு எடுப்பதன் மூலம் உடனடியாக டியுஷன் சென்டர் மற்றும் நூலகம் போன்று உருவாக்க அடியேன் திட்டமிட்டிருப்பதாக நினைத்து கேட்டிருக்கிறார்கள்

2. இதன் இன்னொரு பகுதியையும் சேர்த்து வாடகைக்கு எடுப்பதன் மூலம் இப்படியான ஒரு படியை , சேவைப் பணியை நோக்கி நமது அன்பர் குழுவை நகர்த்த ஒரு வாய்ப்பு ஏற்படும் என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்

3. முதலில் வாடகைப் தொகை செலுத்துவதற்கே நிரந்தரமாக ஒரு 30 பேர் கொண்ட குழுவாது மாதம் ரூ 500 உரிய காலத்தில் அனுப்பிடல் வேண்டும்.

4. கடந்த வருடம் இதே போன்ற முயற்சியை அடியார் சங்க மூலமாக துவக்கினேன். எத்தனை பேர் வாக்கு அளித்தனர். எத்தனை பேர் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது அனுபவம்.

5. இப்படியான சூழலில் வீட்டு உரிமையாளரிடம் பேசிய பிறகு வீட்டில் குடிபுகுந்த பிறகு அடியார் சங்கத்தால் வாடகையை செலுத்த இயலாத சூழல் ஏற்படின் நிர்வாகிகள் தங்கள் கைகளில் இருந்து என்னிடம் சொல்லாமலே செய்து வரக் கூடிய சூழல் உருவாகும். அவர்கள் அப்படித்தான். இந்த சூழல் உருவாககூடாது என்பதால்தான் வைப்பு நிதி உருவாக்கி அதிலிருந்து வரும் வட்டி மூலமாக அளிக்க அன்பர் ஒருவர் ஆலோசனை கூறிய போது ஏற்றதோடு அல்லாமல் எழுதவும் செய்தேன்

6. அதற்கு சுமார் 25 லட்சம் தேவைப்படுகிறது என்று உணர்ந்த பின் , அதைவிட சிலர் இந்த சமூக திட்டங்களை கூறி நன்கொடை பெறலாமா என்று கேட்ட போது என்ன புரிதல் ஏற்பட்டுள்ளது என்று உணர்ந்தேன். ஒரு சமூக திட்டத்தை சிறப்பாக நிகழ்த்துவதற்கு நிர்வாகம் இன்னும் பலப்படவில்லை. நிர்வாகிகளை நன்கொடை பின்னால் அலைய விடுவதில் எனக்கு ஆர்வமும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.

7. தற்போது ஆர்வமாக முன் வரும் ஒருவர் அடுத்த சில மாதங்களில் தன் பங்களிப்பை அளிக்க இயலாத சூழலில் என்னிடம் எவ்வித மாற்று ஏற்பாடுகளும் இல்லை. அதைவிட இதுவரை உருவாக்கிய பல விஷயங்கள் நொடர இயலாது போகும். வீட்டு உரிமையாளரோடு தர்மசங்கடமான சூழல் சந்திக்க நேரிடும் . அதனால் 5 வருடங்களுக்கான வாடகைத் தொகையான ரூ 7.5 லட்சம் கையிருப்பாக இருக்க நேரிடும் போது உறுதியான முறையில் ஒரு 5ஆண்டுகளுக்கு பணி செய்திடும் வாய்ப்பு ஏற்படுகிறது

8. மேலும் இடம் இருப்பதால் விருப்பமுள்ள தன்னார்வ தொண்டர்களின் மூலம் அதிக செலவில்லாது சில முயற்சிகளை மேற்காெள்ளவும் முன்னடுக்கவும் வாய்ப்பாகிறது. அவ்வளவுதான்

தற்போது இதை ஒட்டி மட்டுமே பணி புரிகிறேன். இதற்கே குறைந்த பட்சம் 9 லட்சமாவது கையிருப்பில் சேர்ந்தால்தான் அவரிடம் மேற்கொண்டு பேசவே இயலும் . குறைந்த பட்சமாக 5 வருட அவகாசமாவது கிடைக்கும் .

அதற்குள் ஒரு அன்பர் குழுவை உருவாக்குவதற்கும்  அதற்கான நிர்வாகத்தையும் கட்டமைக்கப்படுவதற்கான வாய்ப்பும் அமைகிறது. எனது சாதனாவிற்கான இருப்பிடம் என்கிற வகையில் மட்டும் எடுத்து இச் செயல்களில் ஈடுபட வேண்டுமெனிலும் சுமார் 7 லட்சம் குறைந்தபட்சமா தேவைப்படும். வாடகைக்கே இப்படி. நிரந்தரமான சேவைகளை செய்திட உறுதியான தன்னார்வ தொண்டர்களூம் சரியான நிர்வாக அமைப்பும் நிச்சயம் தேவை. 7 லட்சத்திற்கு பணி புரிவதற்கு 9 லட்சத்தை உருவாக்குதன் மூலம் ஒரு வகையில் வலிமையான அஸ்திவாரத்தை உருவாக்கிடலாமே என்கிற எண்ணம்தான்.

இந்த 6 ஆண்டுகளில் எனக்காகவும் எவரிடமும் நன்கொடை கேட்டு கையேந்தவில்லை. எப்போதும் ஏதோ ஒரு நோக்கத்தை வைத்து முகநூலில் எழுதியுள்ளேன். விருப்பமுள்ளவரகள் அளித்ததை வைத்து முடிந்த வரையில் சிறப்பாகவே செய்துள்ளேன்.
இல்லையெனில் சேவா சமிதி என்றோ அடியார் சங்கம் என்றோ இரு குழுக்கள் விதையென முளைத்திருக்காது .

இன்று வரை எனது உணவு பிக்ஷையில்தான். ஆனால் இது போன்ற அஸ்திவாரம் அமையுமானால் என்னுடைய ஆரோக்கியத்திற்காக ஒரு சம்யமா உணவும் , அன்பர்கள்  சாதனாவிற்காக பிரத்தேயகமான ஒரு சிறு அறையும்  , இன்னும் சிலருக்கான சேவைகளுக்கான அடித்தளமும் அமைக்கப்பட ஏதுவாகிறது.

சத்குரு ஸ்ரீ பிரம்மா வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் இந்த வாய்ப்பு இறையின் திருவுள்ளமும் ஆசிகளுமேயாகும்

ஆதலால் 1000மோ  ,5000மோ , 10000மோ என தங்களால் இயன்றதை அளித்து அஸ்திவாரமாய் நிற்க வேண்டி விண்ணப்பிக்கிறேன். எவ்வளவு தொகை அனுப்புகிறீர்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. இந்த நோக்கத்தில் எனக்கு பின்புலமாக இத்தனை அன்பர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு பலம். அதுவே வரமும் கூட.

நன்காெடை அனுப்ப விரும்புகிறவர்கள்

Swami sushantha
Savings bank account no
7863000100009075
PNB , guptakashi
IFSC code:- PUNB0786300

Pls send ur address with Pin code & phone no

நன்றிகளோடு

சுவாமி சுஷாந்தா
02/12/2017

No comments:

Post a Comment