Friday 29 November 2013

எதையோ சொல்ல முயற்சிக்கிறேன்

ஒரு சிற்பி பலதும் செய்கிறான் அனைத்தும் ஒரே விதமாய் இருப்பதில்லை ஒரு குயவன் பலவகை பானை செய்கிறான் அனைத்தும் அவனை பிரதிபலிப்பது இல்லை இதற்கு பல காரணங்கள் பல முரண்பாடுகள்

இவற்றை என்னுள்ளும் , என்னை சுற்றிலும் கூட நான் உணர்கிறேன் பல சமயங்களில் , சில சமயங்களில் நான் எந்த பக்கம் பேசுகிறேன் என்பதே குழப்பமாகிவிடுகிறது இப்படி இரண்டையும் கலந்து பேசுவதால்

ஒரு பரிமாணத்தை மட்டுமே ஒழுங்காக பேச முடியாத உலகில் --- ஹிரோவும் நானே வில்லனும் நானே என்றால் படம் பார்ப்பவருக்கும் குழப்பம் ஏற்படத்தானே செய்யும் , நடிப்பவருக்கு வேண்டுமானால் தான் ஒரு கமலஹாசன் என்று எண்ணம் இருக்கலாம் ஆனால் பார்ப்பவனுக்கு சலிப்பைத்தான் ஏற்படுத்தும் ஏனென்றால் அவன் நம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்கவில்லை , நம் பார்வையை மற்றும் கருத்தை மட்டுமே எதிர் கொள்கிறான்

பலமுறை இவரைப் பற்றி கேள்வி பட்டுள்ளேன் எழுத்துரு பற்றி விவாதத்தில் எழுதியதே புரியவில்லையே என யோசித்தும் உள்ளேன் தேவையின்றி சச்சரவுகள் மூலம் தன்னை பிரபலபடுத்துகிறாரோ என்றும் கூட யோசித்து உள்ளேன்

இன்று இக்கட்டுரையை ஒருவர் எனக்கு பரிந்துரைத்து இருந்தார் அதனால் படிக்க நேர்ந்தது ,

இதில் ஒரளவு சமநிலையாகவே இருபுறத்தையும் --முரண்பாடுகளை அழுகாகவே காட்டியுள்ளார்னு படுது ஆனா இப்படி ஆராய்ச்சி செஞ்சா எதுவுமே மிஞ்சாது . என்ன சொல்ல வர்றார் அப்படிங்கறது கடைசி வரை இதுதான் புரிஞ்சிக்க முடியாது , ஏன்னா இவரது பார்வைய எழுத்துல கொண்டு வர்ற முயற்சித்துள்ளார்,   ஆனால் எத்தனை பேருக்கு இது புரிந்து கொள்ள முடியும் என்பது எனக்கு தெரியவில்லை,

எழுத்து என்பதும், அதை எழுதுவதும் பிறர் புரிந்து கொள்ளத்தானே , நமக்கு புரிநது கொள்வதற்காக எதையும் நாம் எழுதுவதில்லையே,

ஆதலால் முரண்பாடுகளை பற்றி பேசும் போது, முரணியத்தை பற்றி பேசும்போது,  முரண்பாடுகள் இன்றி ஒரு பரிமாணத்திலேயே பயணம் செய்தால் நல்லது

ஆனால் அதிலும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது அடுத்தமுறை அதன் எதிர்புறத்தில் பேசினால் அன்று அப்படி சொன்னாயே இன்று மாற்றிப் பேசுகிறாய் என்று கூறுவார்கள் , ஆனால் இதிலாவது ஒரளவு புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றே தோணுகிறது,

நாம் உலகை பார்ப்பதும் நாம் உலகில் செயல்படுவதும் இரு வெவ்வேறு நிலைகள் , பார்ப்பதைப் போலவே செயல் படமுடியாது , ஆனால் அற்புதமான செயல் புரிய அழகான மற்றும் தெளிவான பார்வை அவசியமும் கூட ,

இதையெல்லாம் புரியும் வரை , இதையெல்லாம் கற்று தெளியும் வரை , இதையெல்லாம் பயன்படுத்துவதில் லாவகம் பெறும் வரை மௌனமே சிறந்தது

இருந்தாலும் பகிர்கிறேன் , முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள் , இல்லையெனில் விவாதத்தில் நேரம் கழிக்காது வேறு உபயோகரமான வேலையை பாருங்கள் அதுதான் இருவருக்கும் உத்தமம்

பக்தியா இருக்கறவங்க பக்தியா இருந்துட்டு போகட்டும், நாத்திகம் பேசறவங்க நாத்திகம் பேசட்டும், சோஷியல் சர்வீஸ் பண்ண நினைக்கறவங்க எதுக்காக ஆன்மீகம் பரப்ப சொல்லனும்

அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்தவரே , ஞானிகளும் சித்தர்களுமே அவங்க கிட்ட வந்த மனுசங்களுக்கு அவங்களுடைய நிலைக்கு தகுந்தாப்பலதான் பேசறாங்களே தவிர இவங்களோட ஞானத்தை கொண்டு போய் விளம்பரப் படுத்திக்கிறது இல்ல ,

இப்பத்தான் புரியுது ஏன் பிரச்சனைகளையும் விமர்சனங்களையும் சந்திக்கிறார்னு, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே -- வசனம் நல்லாத்தான் இருக்கு

ஆனா நிதர்சன வாழ்க்கையில் போய் ஒரு அரசியல் செல்வாக்கு உள்ள மனுசன் கிட்ட சொல்லிப் பாருங்க அப்ப தெரியும் அந்த சொல்லுக்கு எவ்வளவு சக்தி  இருக்குன்னு

நாம் நாமளாகவே இருப்போம் நம்மால் முடிந்ததை பிறரோடு பகிர்ந்து வாழ்வை இனிதாக்குவோம்

எல்லோரும் இன்புற்று இருக்க வேறுஒன்றும் யாமறியேன் பராபரமே

தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்

http://www.jeyamohan.in/?p=26158

ஆனா நான் எதுவும் சொல்ல வரலேங்க இந்த கட்டுரையில் , இப்படி முரண்பாடான தியரிய பத்தி மட்டும் பேசறேங்க , இப்படி சொன்னா எப்படி?

நிச்சயமா நான் எதுவும் சொல்ல வரலேங்க. ஆனா எதையோ சொல்ல முயற்சிக்கிறேன் அப்படின்னு போட்டுட்டு இவ்வளவு தூரம் எழுதிட்டு இப்ப இப்படி சொன்னா எப்படினு நீங்க கேட்கலாம்? அதுதாங்க முரண்பாடே

அதுதான் நீங்க இப்ப படிச்சீட்டீங்களே , நீங்க படிக்கறீங்கன்னா நீங்க எனக்கும் எழுத்துக்கும் ரசிகர்னுதானே அர்த்தம் , ஆனா நீங்க ரசிக்கும் போதே , குழப்பமா உணர்ந்திங்கன்னா அப்படின்னா முரண்பாடு தியரி ஒர்க் அவுட் ஆகுதுன்னு அர்த்தம்

அப்பாடா  தாங்க முடியலடா --- மௌனமே பெட்டர் னு தோணுது எனக்கு
உங்களுக்கு?

இதுதான் இந்த எழுத்துக்களின் நிதர்சனம் அதேசமயம் இதை எழுத்துக்களில் கொண்டுவந்தமைக்கு அவரை ரசிக்கிறேன்,  எப்படி நம்ம முரணியம்,

No comments:

Post a Comment