Sunday 1 December 2013

முத்தான மூன்று செயல்கள் -- இதுவே இன்றைய தேவை

சட்டம் , நீதித்துறை , வக்கீல் , ஜட்ஜ் அய்யா என அனைவரும் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெளிவாக பேசுகிறோம் , அப்படி பேசும் போது எல்லாம் நம்மை எல்லாம் தெரிந்த ஏகாம்பரனாகவும், சமத்துவம் பேசும் சமுதாய பிரதிநிதியாகவும் காட்டிக் கொள்ள முயல்கிறோம் என்று படுகிறது

ஆனால் நாம் ஏதாவது ஒரு பிரச்சினையிலோ அல்லது வில்லங்கத்திலோ மாட்டிக் கொண்டால் அல்லது மாட்டிக் கொள்வோம் என்று யூகித்தோமேயானால் உடனே அதே சட்டத்தை எப்படி உடைப்பது அல்லது வளைப்பது என்பதை அதே வக்கீல்கள் கொண்டே அதே பணத்தை கொண்டே (எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க) தயார் செய்கிறோம்

ஆனால் இப்போது நாம் அதை விரும்பா வில்லையென்றும் நமது நண்பர்களும் உறவினர்களும் உதவ முன் வந்தது போலவும் நாம் எந்த விதத்திலும் குறைபாடு இல்லாதவர்களாய் காட்டிக் கொள்ள முயல்கிறோம்

இதே விதமாகத்தானே மற்றவர்களும் செயல்படுகின்றனர் , ஆனால் ............. எண்ணிப்பாருங்கள் மக்களே எவ்வளவு ஏமாற்றத்தில் வாழ்கிறோம் என்று .

இதனால்தான் சத்தியாகிரக போராட்டத்தின் போது காந்தி , இன்று அந்த சட்டத்தை எதிர்த்து போராடும் நாம் , அந்த சட்டத்தின் அடிப்படையில் அதற்கு கட்டுப்படாவிட்டால் நாளை எதிர்காலத்தில் நாம் இயற்றும் சட்டத்திற்கு மட்டும் மற்றவர்கள் கட்டுபடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியதியாகும் என்று கேட்டார்.

தனிமனித வளர்ச்சியே சமுதாய வளர்ச்சி

தனிமனித ஒழுக்கமே சமுதாயத்தின் ஒழுக்கத்தின் பிம்பம் ஆகிறது

தனிமனிதனுக்குள் விழிப்பை கொண்டு வருவோம்

நாளைய எதிர்காலம் நீங்கள் விரும்புவது போன்று இருக்கவேண்டுமானால் மூன்று செயல்கள் மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்

1, இன்றிலிருந்து வாக்குரிமை பற்றிய விழிப்புணர்வையும் பரப்பி வாருங்கள்

2, தங்களுக்குள்ளும் , சமுகத்திலும்  களைகளை கண்டெறிந்து களைகளின் தன்மைக்கேற்ப புத்திசாலித்தனமாய் பிடுங்கி எறியுங்கள்

3, புதிய விதைகளை விதையுங்கள் ( இந்த விழிப்புணர்வையும் ஒழுக்கத்தையும் தங்களை சுற்றியுள்ள இளைஞர்களிடம் பதியச் செய்யுங்கள்)

எந்த அரசியல் கட்சியையும் சார வேண்டாம்

ஒரு புதிய சமுதாயம் படைப்போம்

என்ன செயல் பட தயாரா ? அதை விடுத்து வெற்று விவாதங்கள் கதைக்குதவாது

நேர்மையாய் வாழ முயற்சி செய்வோம் நிச்சயம் ஒருநாள் இருட்டை வெல்வோம்

மனித சமுதாயத்திற்கான இச் செயலை ஜாதி , மதம் கடந்து , அரசியல் கட்சிகள் அனைத்தையும் கடந்து எடுத்துச் செல்வோம்

### பரமானந்த பாபாஜி பேசியதில் இருந்து புரிந்ததை பகிர்ந்தேன்

No comments:

Post a Comment