Monday 1 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 1



நினைவில் நிற்கும் மனிதர்கள்- 1

ஒவ்வொருவர் வாழ்விலும் பல மனிதர்கள் வந்து சென்ற போதிலும் சில மனிதர்களை நாம் மறக்க இயலாது, அவர்களது தாக்கம் நம் வாழ்வில் பல வடிவில் தொடர்ந்து கொண்டே இருக்கும் , இது அவர்கள் கூட அறியாதது, அப்படி என் வாழ்விலும் நிறைய பேர்.......... அவர்கள் எல்லாம் என்னிடம் எதையும் எதிர்பார்த்தது இல்லை ஆனால் இவர்கள் இல்லையேல் இன்று - நான் - என்று சொல்லிக் கொள்ளும் - நான் - இல்லை

அவர்களை பற்றி சில வார்த்தைகள் குறிப்பிட்டு . பின் நன்றி எனறு சொல்லி கட்டுரையை முடித்தால் அது அவமரியாதையாக இருக்கும் என்று கருதுகிறேன். அதேசமயம் அவர்களுக்கான மரியாதையை, எனது நன்றியுணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்பதும் தெரியவில்லை.

அதேபோல் இவர்களில் யார் மிக முக்கியம் வாய்ந்தவர் . யாரை பற்றி முன்னால் எழுதுவது . யாரைப் பற்றி பின்னால் எழுதுவது என்பதும் எனக்கு புரியவில்லை. ஏனெனில் அனைவருமே அவரவர் பாணியில் சம அளவில் என்னுள் பாகமாகி உள்ளதாக உணர்கிறேன் . அதனால் இது ஒரு அவர்களுக்காக என்னை சமர்ப்பிக்கும் ஒரு சிறிய முயற்சி

என்னை பெற்றெடுத்த அம்மாவைப் போலவே . எனது வாழ்வின் மிக முக்கிய பரிமாணத்திற்கும் ஒருவர் தன்னை அர்ப்பணித்து . என்னை கைபிடித்து அழைத்துச் சென்றுள்ளார் . அவர்தான் பிரபாகர் அண்ணா . அதாவது இன்றைய சுவாமி நிராகாரா.

அவரைப் பற்றி ................ காத்திருங்கள் அடுத்த பதிவிற்கு

No comments:

Post a Comment